News August 8, 2024
போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது

விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று, புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்ற நபரிடம் விசாரித்தபோது, அவா் போலீசார் ஒருவரைத் தாக்கி, தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரையும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். விசாரணையில் அவர் பாலாஜி (28) என்பதும், குற்றச்சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவர, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
Similar News
News December 15, 2025
விழுப்புரம்: லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது!

திருவெண்ணெய்நல்லூர், பெண்ணைவலம் அங்காளம்மன் கோயில் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.
News December 15, 2025
விழுப்புரம்: லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது!

திருவெண்ணெய்நல்லூர், பெண்ணைவலம் அங்காளம்மன் கோயில் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.
News December 15, 2025
விழுப்புரம்: மனைவி பிரிந்து சென்றதால் நடந்த சோகம்!

விக்கிரவாண்டி, பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலம் பாதித்திருந்த சசிக்குமார் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி உழவர் சந்தை அருகே மயங்கி விழுந்து காயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


