News October 25, 2024

போலீசாருக்கு குமரி எஸ்.பி அறிவுரை

image

தற்போது சமூகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நேரத்தை ஆராய்ந்து பார்க்கின்ற போது குறிப்பாக மதிய வேளையில் 1 முதல் 5 மணி வரை உள்ள வேளையில் நடைபெறுகிறது என்ற குறிப்பு தெரிய வந்துள்ளதால் போலீசார் இந்த நேரத்தில் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என குமரி எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

குமரி: தந்தையை தீவைத்துக் கொளுத்திய மகன்

image

இடைக்கோடு அருகே முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணிக்கும் (70), இவரது மகன் சுனில் குமாருக்கும் (37)இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 9, 2025

BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 9, 2025

குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!