News March 26, 2025
போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
கள்ளக்குறிச்சி: மதுபான கடை முன்பு கைகலப்பு

சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு அரசு மதுபான கடையில் நேற்று பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக்கொண்டனர். மதுபான கடை அருகே ஒருவருக்கு ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன், அவர்களிடம் விசாரணை செய்தனர். பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
News October 20, 2025
கள்ளக்குறிச்சி: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <
News October 20, 2025
கள்ளக்குறிச்சி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!