News March 26, 2025

போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

கள்ளக்குறிச்சி: சிசிடிவி பழுது.. போலீசார் திணறல்!

image

உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் அமைத்த சிசிடிவி கேமராக்கள்பராமரிப்பு இன்றி பழுதாகி கிடப்பதால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய பகுதியில், பைக் திருட்டு, வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

News November 27, 2025

கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு!

image

திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் வரும் டிசம்பர் 13ம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

image

முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா தன்னுடைய இருசக்கர வாகனத்தை நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மீண்டும் இன்று காலை எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இரு சக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக ஜெயசூர்யா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

error: Content is protected !!