News October 24, 2024
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 4 பேர் கைது

பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 4, 2025
திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள்-10, நான்கு சக்கர வாகனம்-2 மூன்று சக்கர வாகனம்-1 என மொத்தம் 13 வாகனங்கள் வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2025-26 பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்ட சிவப்பு மிளகாய்க்கு 31.01.26 வரையிலும், வெங்காய பயிருக்கு 15.02.26 வரையிலும், வாழை, மரவள்ளி பயிருக்கு 28.02.26 வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2025-26 பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்ட சிவப்பு மிளகாய்க்கு 31.01.26 வரையிலும், வெங்காய பயிருக்கு 15.02.26 வரையிலும், வாழை, மரவள்ளி பயிருக்கு 28.02.26 வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


