News October 24, 2024
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 4 பேர் கைது

பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 15, 2025
திருச்சி: ஏர்பஸ் விமானம் இயக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவைக்காக பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் (டிச.16) முதல் (டிச.31) வரை அதிக இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானம், இண்டிகோ நிறுவனம் மூலம் இயக்க உள்ளது. இந்த சேவை பொதுமக்கள் பயணிக்கும் வகையில், இருக்குமா? என்பது அந்த விமானங்கள் இயக்கப்படும் போது தெரியவரும், இதனால் மற்ற சேவைகள் ரத்து.
News December 15, 2025
திருச்சி: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.


