News April 9, 2025
போலி கிப்லி தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் தற்போது Ghibli-பாணி படங்கள், உருவாக்குவதே ட்ரெண்ட்டாக உள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை கார்டூன் போல் மாற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 23, 2025
நெல்லை அருகே ரயில் மோதி பரிதாப பலி!

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் (47). இவர் கடந்த சில மாதங்களாக வண்ணார்பேட்டையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக நெல்லை வந்தார். குலவணிகர்புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 23, 2025
நெல்லை: காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை முயற்சி!

களக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (28). இவரும் திமுக நிர்வாகியான செல்வகருணாநிதி மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 2 பேரும் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக காரில் வந்த செல்வகருணாநிதி, முத்துச்செல்வன் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 23, 2025
நெல்லை: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


