News October 25, 2024
போலி இணையதள மோசடி சைபர் கிரைமில் புகார்

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாகக் கூறி சிலா் மோசடியில் செய்வதாக கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பி.சந்திரசேகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட முயன்ற நபா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி:பணம் வைத்த சீட்டாட்டம் 5பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திகேயன், ஜீவா, அருள், சுரேஷ், முரளி ஆகிய ஐந்து பேரை கையும் களவுமாகப் பிடித்து (நவ.16) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


