News December 31, 2024

போராட வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போராட்டத்திற்கு வருமாறு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News October 16, 2025

சென்னை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

சென்னை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, ‘<>ராஜ்மார்க் யாத்ரா’<<>> ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு தயார்!

image

வடகிழக்கு பருவமழைக்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்கள், 193 நிவாரண மையங்கள் மற்றும் 150 சமையல் கூடங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளதகவும், மழைநீர் வடிகால்களில் பராமரிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உட்பட 22,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

ரூ.35,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (OSC) பெண்களுக்கான பல்வேறு ஒப்பந்தப் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் முதல் பாதுகாவலர் வரை பல பதவிகள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாத ஊதியம் ரூ.35,000 ஆகும். இதற்கு https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.

error: Content is protected !!