News August 16, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News November 16, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 15, 2025

திண்டிவனம் சார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி உட்பட பலர் உள்ளனர்.

News November 15, 2025

சிறுவாடி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி

image

72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்காணம் வட்டம் சிறுவாடி கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி, பலர் உள்ளனர்.

error: Content is protected !!