News November 3, 2025
போனை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுறீங்களா?

குழந்தைகளுக்கு போனில் கார்ட்டூனை காட்டியபடி, சோறு ஊட்டும் பழக்கம் பல வீடுகளிலும் இருக்கிறது. ஆனால், ‘Screen Feeding’ எனப்படும் இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இம்முறையில் வளரும் குழந்தைகளுக்கு பேச்சு வருவது தாமதமாவது, கவனமின்மை, பெற்றோருடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனிமே கவனமா இருங்க. இதை அனைவருக்கும் பகிருங்க.
Similar News
News December 8, 2025
கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.
News December 8, 2025
அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்திருக்கிறீர்களா?

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.


