News January 24, 2025
போதை பொருட்கள் இல்லாத காரைக்குடியாக மாற்றுவோம்

காரைக்குடியில் பள்ளிகளின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளதாகவும், கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்று காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
காரைக்குடி: பள்ளி மாணவன் தற்கொலை

காரைக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் மணிகண்டன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர்கள் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


