News August 14, 2024
போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.
Similar News
News December 8, 2025
சங்கரன்கோவிலில் 257 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், சங்கரன் கோவில் தேரடி வீதியில் நேற்று ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கோவில் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோ.செயலாளர் ஆறுமுகச்சாமி, மா.செ ஆறுமுகம் உள்ளிட்ட 257 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
News December 8, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <


