News August 14, 2024

போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

image

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.

Similar News

News November 28, 2025

தென்காசி: டிப்ளமோ போதும்.. ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.11.2025. சம்பளம் – ரூ.35,400 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 28, 2025

தென்காசி: மின் பஸ் மோதி இளைஞர் பலி

image

வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த கோபால்சாமி (27) அப்பகுதி டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகே உள்ள டீக்கடைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே வந்த மினிபஸ் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி G.Hக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், மினிபஸ் டிரைவர் குருராஜ் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 28, 2025

தென்காசி: வாக்காளர்களே., இந்த தேதி தான் கடைசி!

image

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த கணக்கீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் டிச.4-ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (அ) வாக்குச்சாவடி நிலை முகவர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-ல் இடம்பெறாது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!