News August 14, 2024

போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

image

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.

Similar News

News December 1, 2025

வென்னிமலை முருகனுக்கு நாளை வருஷாபிஷேகம்

image

பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (டிச.2) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும்,  10.30 மணி முதல் 12 மணிக்குள் விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  1 மணிக்கு அன்னதானமும், இரவு முருக பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

News December 1, 2025

தென்காசி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

தென்காசி மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

image

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!