News June 26, 2024
போதைப்பொருள் குறித்த தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பற்றிய தகவலை கீழ்கண்ட 7845385637, 9176098100 எண்களில் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
திண்டுக்கல் அருகே நாசம் செய்த காட்டு யானைகள்!

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே காட்டு யானைகள் அடிக்கடி மலையடி வர தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதன்படி கன்னிவாடி அருகே முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்தயானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை மிதித்து உடைத்து நாசம் செய்தது.வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனப் பணியாளர்கள் அங்கு வந்து சேதமானமரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
பழனி அருகே நேபாள பெண் விபரீதம் முடிவு!

திண்டுக்கல்: நேபாளம் நாட்டை சேர்ந்த சங்கர் சுணார் (வயது 25). இவர் தனது மனைவி ஜனப் பரியாருடன் (18) பழனி அருகே ஆண்டிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். ஜனப்பரியார் அடிக்கடி செல்போன் பார்த்ததைசுணார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனப் பரியார் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெய்காரப்பட்டி போலீசார் விசாரணை!


