News June 26, 2024
போதைப்பொருள் குறித்த தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பற்றிய தகவலை கீழ்கண்ட 7845385637, 9176098100 எண்களில் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு மாற்றம்

திண்டுக்கல் உட்கோட்டத்தை சார்ந்த NH209 (திண்டுக்கல் – பழனி சாலை) சண்முகநதி பாலத்தில் (கிமீ 59/650 – 59/840) 22 மற்றும் 23 அக்டோபர் 2025 அன்று சாலைப்பணி நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்று பாதை வழியாக செல்லமாறு அறிவுறுத்தப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொதுமக்கள் இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
News October 21, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று அக்டோபர்-21 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்!
News October 21, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.