News April 7, 2025
போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த மர்ஸ்க் அலி (24) மற்றும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (21) ஆகிய இருவரும் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்க்கின்றனர். இந்த கடைக்கு இளைஞர்கள் அதிகம் வந்து சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை விற்பனை செய்துள்ளனர். போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 17, 2025
பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை, மானாமதுரை பகுதி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பகல் நேரத்தில் சென்னைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லாததால், பேருந்துகளில் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னையிலிருந்துகாரைக்குடி வரை தினசரி இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
News April 17, 2025
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04575–240391,2403921,காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101,குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம். *ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
சிவகங்கையில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.