News September 13, 2024

போதகாட்டில் மனைவிய அடித்துக் கொன்ற கணவன் கைது

image

பாப்பிரெட்டிபட்டி அடுத்த போதகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10-ம் தேதி மர்மமாக இறந்தார். இதுகுறித்து அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்பத்தகராறில். மனைவி ஆர்த்தியை கணவன் கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அரூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 8, 2025

தருமபுரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

தருமபுரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<> epettagam.tn.gov.in<<>> என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கொடுத்து உங்களின் ஆவணங்களை அனைத்தும் உடனே பதிவு செய்து கொள்ளலாம் . SHARE செய்யவும்.

News November 8, 2025

தருமபுரி: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!