News April 6, 2025
போட்டோகிராபர் மயங்கி விழுந்து பலி

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (57). போட்டோகிராபரான இவர், வேலுார் தென்னைமர தெருவில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
வேலூரில் இப்படியா? பேரதிர்ச்சி!!

வேலூர் மாவட்டத்தில், கடந்த 10 மாதத்தில் 415 டீனேஜ் பிரசவம் ஆகியுள்ளார். மேலும் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணம் நடந்துள்ளது என நேற்று (அக்.28) நடந்த மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுக்ளது. குழந்தை திருமணத்தை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இது ஒரு பொதுவான நிகழ்வாகவே தோன்றுகிறது.
News October 29, 2025
வேலூரில் குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வரும் (அக்டோபர் 30 )அன்று காலை 8 மணி முதல் வசந்தபுரம் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5000/-, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000/- செலுத்தி கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல்துறை செய்தியை வெளியிட்டுள்ளது.
News October 29, 2025
இரவு ரோந்து பணியில் பல்வேறு காவல் அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை காவல்துறை ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் சுன்னியப்பன், தயாளன், தமிழ்செல்வன், முத்துசெல்வன் ஆகியோர் தலைமையில் ரோந்து மேற்கொள்கின்றனர். அவசர உதவி: 100 / 8939754100.


