News June 26, 2024
போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

TNPSC 2024-ம் ஆண்டு, TNPSC GROUP II & IIA தேர்வுக்காக 14 செப்டம்பர் 2024 தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன்-28 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள மா.நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News December 17, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளோர் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04328-296352-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
பெரம்பலூர்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் நேற்று (டிச.16) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


