News March 29, 2025

போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

image

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

Similar News

News October 24, 2025

தேனி: மருமகனின் வெறிச்செயல்

image

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு

News October 24, 2025

வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்த முருகன்

image

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு சஷ்டி விரத இரண்டாம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

News October 23, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!