News January 3, 2025

போக்சோ வழக்கில் இளைஞர் மீது வழக்கு

image

நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சசிகுமார் (19). இவர் கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இது குறித்து பண்ருட்டி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 13-ம் தேதி, மங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

கடலூர்: லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

image

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

News December 6, 2025

கடலூர்: ரயில் மோதி கல்லூரி மாணவன் பலி

image

காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்தி நாதன் (22). தனியார் கல்லூரியில் படித்து வந்து இவர் நேற்று பண்ருட்டி அருகே விழாமங்கலத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!