News March 21, 2024

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News December 19, 2025

BREAKING: திண்டுக்கல்லில் 3 லட்சம் பெயர்கள் நீக்கம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில்,
▶️ திண்டுக்கல்- 60,493
▶️ பழனி- 52,174
▶️ ஒட்டன்சத்திரம்- 34,127
▶️ ஆத்தூர்-48,145
▶️ நிலக்கோட்டை-41,850
▶️ நத்தம்- 46,133
▶️ வேடசந்தூர்- 41,972
▶️ என மொத்தம் மாவட்டத்தில் 3,24,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

திண்டுக்கல்: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

News December 19, 2025

வத்தலகுண்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக தாண்டிக்குடியைச் சேர்ந்த யாதவ்குமார் (19) மீது புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், யாதவ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!