News March 26, 2025

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில்  தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Similar News

News December 3, 2025

தேனி: மனைவி கோபித்து கொண்டதால் கணவன் தற்கொலை

image

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.

News December 3, 2025

தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

News December 3, 2025

தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

error: Content is protected !!