News March 26, 2025
போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News December 4, 2025
தேனி: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்!

தேனி மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் இங்கு <
News December 4, 2025
தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (04.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர் புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யுங்க.
News December 4, 2025
கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.


