News March 26, 2025
போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News November 28, 2025
தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 28, 2025
தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 28, 2025
தேனி: எலி மருந்து குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.!

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூவிகா (17). பள்ளி மாணவியான இவருக்கு கடந்த 21ம் தேதி பிறந்தநாள் நடைபெற்றது. பிறந்தநாள் நிகழ்விற்கு பெற்றோர்கள் புது துணி எடுத்து தராததால் பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.26) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


