News April 4, 2025
போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.
Similar News
News January 9, 2026
அத்தாணி அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

அத்தாணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(17) ஐடிஐ மாணவர் ஆவார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலுக்குள் விழுந்தது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 9, 2026
ஈரோடு: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 9, 2026
ஈரோடு: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)


