News March 19, 2025
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் மைலம்பாறை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் வீரன், கோவிந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிபோதை, ஓட்டுநர் உரிமம் இல்லாதிரத்தல், அதி வேகம், ஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட, 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
Similar News
News March 20, 2025
மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.
News March 20, 2025
கள்ளக்குறிச்சியில் நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 20, 2025
உளுந்தூர்பேட்டையில் விமான ட்ரோன் பூங்கா

உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடு பாதையில் விமான பரிசோதனைக் கூடம், விமானப் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசிடம் நிலத்தை வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் இன்று(மார்.19) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.