News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News December 2, 2025

அரியலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

அரியலூர்: மழையின் காரணமாக 63 வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 32 குடிசை வீடுகள் பகுதி அளவும், 31 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும், அதன்படி மொத்தமாக 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தரப்பட்டுள்ளது. மேலும் திருமானூரில் மட்டும் நேற்று 3.2 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.

News December 2, 2025

அரியலூர்: காணாமல் போன சிறுமிகள் ஒப்படைப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் வீட்டில் சண்டையிட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் தளவாய் காவல் நிலையத்தில், புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அரியலூர் எஸ்.பி விஷ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், கடந்த 30ஆம் தேதி சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!