News February 15, 2025
போக்குவரத்துக்கு இடையூறு தந்த பெட்டிக்கடைகள் அகற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம் நீதிமன்றம் பகுதியில் அத்துமீறி பெட்டிக் கடைகள் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் நகராட்சியிடம் புகார் அளித்தனர். அதன்படி இன்று (பிப்.15) இரும்பு பெட்டிக் கடைகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: பெண் விபரீத முடிவால் மரணம்!

ஆம்பூர் பர்ணக்கார பகுதியை சேர்ந்த தன்வீரி மனைவி ஆசியா பர்வீன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆசியா பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
திருப்பத்தூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
திருப்பத்தூர்: விபத்தில் தாய் மகள் இருவரும் பலி!

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இவரது மகள் ரீத்தா என்பவர் தனது மொபட் டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த நவ.25ம் தேதி அழைத்து சென்றார். அப்போது திரியாலம் பகுதியில் மொபட் தவறி விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் நேற்று (நவ.30) பத்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


