News February 15, 2025
போக்குவரத்துக்கு இடையூறு தந்த பெட்டிக்கடைகள் அகற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம் நீதிமன்றம் பகுதியில் அத்துமீறி பெட்டிக் கடைகள் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் நகராட்சியிடம் புகார் அளித்தனர். அதன்படி இன்று (பிப்.15) இரும்பு பெட்டிக் கடைகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர்: தென்கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே..,தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தனியாக தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 21, 2025
திருப்பத்தூர்: குழம்பில் தவறி விழுந்த குழந்தை!

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மேல்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ்ரீ என்ற 3 வயது குழந்தை, நேற்று(நவ.20) தனது வீட்டில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து, பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (நவ.20) இரவு முதல் இன்று காலை (நவ.21) வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.


