News February 17, 2025
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்- கலெக்டர் அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் பிற்படுத்த உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

நீடாமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியை அதே பகுதியில் கைப்பேசி கடையில் வேலைபாா்த்து வரும் கெளதம் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌதம் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அடுத்து மகள் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
திருவாரூர்: மின்சாரம் தாக்கி வெல்டர் உயிரிழப்பு

காரியங்குடி பகுதியில் அடகுக் கடை ஒன்றில் ரஞ்சித், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் நேற்று வெல்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மணிகண்டன், சந்தோஷ் ஆகிய இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


