News February 17, 2025
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்- கலெக்டர் அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் பிற்படுத்த உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…
News November 6, 2025
திருவாரூர்: செவிலியரை வெட்டியவர் கைது

வடுவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செவிலியரை வழிமறித்து அரிவாளால் வெட்டி ஏழு பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபரை வடுவூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தங்க செயினை பறித்து சென்ற சுரேஷ் (24) என்பவரை வடுவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அந்த செயினையும் பரிமுதல் செய்தனர்.
News November 6, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


