News January 23, 2025

பொருநை புத்தகத் திருவிழா 31-ல் தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா வரும் 31ஆம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. நெல்லை மாநகராட்சி வர்த்தக மையம் அரங்கில் புத்தகத் திருவிழா தொடங்கி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்க உள்ளனர். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Similar News

News September 16, 2025

நெல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாம் – கலெக்டர் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை வி.எம் சத்திரம் சண்முக மஹால், வள்ளியூர் எம்.எஸ்.மஹால், கோடீஸ்வரன் நகர் ஜெயம் மஹால், இட்ட மொழி பெருமாள் தங்கவேல் ஜெயராஜ் மண்டபம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சமுதாயம் நலக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News September 16, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 15, 2025

நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!