News September 28, 2024

பொம்மிடியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்

image

தருமபுரியில் மிகப்பழமையான ரயில் நிலையமான பொம்மிடி ரயில் நிலையம் 1867ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.15 கோடியே 18 லட்சம் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு கூடம், 2000 பேர் நின்று ஏறக்கூடிய வகையில் நடை மேடைகள் தங்கும் விடுதி, உணவு விடுதிகள் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 25, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 25, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 25, 2025

தருமபுரி: சட்டவிரோத டீசல் விற்பனை: ஒருவர் கைது

image

காரிமங்கலம் பகுதிகளில் சட்டவிரோத டீசல் விற்பனை நடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் சென்றபோது அங்கே சட்டவிரோதமாக டீசலை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ் 40 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!