News August 11, 2024
பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News December 4, 2025
சென்னை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

சென்னை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
JUST IN: சென்னையில் பிரபல தயாரிப்பாளர் காலமானார்

சென்னையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான AVM சரவணன் காலமானார். இவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவர் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று காலை காலமானார். இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 4, 2025
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து இன்று (டிச.4) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். *மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க*


