News August 11, 2024
பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News December 19, 2025
சென்னையில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை காலை 10 முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8th, 10th, +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 19, 2025
JUST IN: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 25,79,576 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SIR-க்கு பின்பு 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
JUST IN சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை!

இயக்குநர் லிங்குசாமியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பெற்ற ரூ.35 லட்சம் கடனுக்காக வழங்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனது. 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், இயக்குநர் லிங்குசாமி & நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கடன் தொகையை 2 மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.


