News April 16, 2025
பொன்னமராவதி அருகே இளைஞர் தற்கொலை

பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் நேற்று இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர், சிவகங்கையை சேர்ந்த சேவுகன் மகன் மணிகண்டன் (37) என்பதும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். தற்கொலை குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
புதுவை: மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிச.10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் இன்று முதல் தங்களது கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


