News April 8, 2025

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

image

 மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.

Similar News

News October 22, 2025

ராணிப்பேட்டை: ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இன்று (அக்.22) நிலவரப்படி 872.87 கியூசியஸ் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று மகேந்திரவாடி ஏரியில் இருந்து 139.46 கியூசியஸ், சங்கரம்பாடி ஏரிலிருந்து 37.41 கியூசியஸ் தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 115.6 மிமீ முதல் 204.மிமீ அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!