News September 14, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று(செப்.9) நடைபெற்றது. இதில் காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களின் மின்னணு குடும்ப அட்டைகளில்பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Similar News

News October 31, 2025

விருதுநகர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News October 31, 2025

விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

நாளை (நவ. 1) விருதுநகர் நகராட்சி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ், முதல்-அமைச்சர் காப்பீடு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News October 31, 2025

மேம்பாலம் திறப்பு விழா குறித்து எம்.எல்.ஏ அறிவிப்பு

image

சிவகாசியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து எம்எல்ஏ அசோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதுடன் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் தனியார் பங்களிப்புடன் மின் விளக்குகள், நீரூற்று பொருத்தப்பட உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

error: Content is protected !!