News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 2, 2025

திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை.. இருவர் கைது

image

திண்டுக்கல் அருகே கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நந்தவனப்பட்டியை சேர்ந்த கலைமணி மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News November 2, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர் 1) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 1, 2025

திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 1) சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிக்னல் விதிகளை கடைபிடித்தல், ஜீப்ரா கிராசிங் பயன்படுத்தல், சாலையை கடக்கும் போது இருபுறமும் பார்வையிடுதல், ஓடாமல் பாதுகாப்பாக நடப்பது உள்ளிட்ட முக்கிய வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

error: Content is protected !!