News April 18, 2025
பொதுமக்கள் தர்ம அடி வடமாநில வாலிபர் இறப்பு

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 16, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பேரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், மொக்கையம்பாளையம், சடையம்பாளையம், கவுண்டம்பாளையம், சூரிப்பாறை, ஆலுச்சாம்பாளையம், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஜம்பை, சலங்கபாளையம், பெரிய, சின்ன மோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், புன்னம், எலவமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 16, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய திருடன்!

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் வெளியே லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை சக்திவேல் என்பவர் கழட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மடக்கிப்பிடித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


