News April 23, 2025

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News November 22, 2025

மொடக்குறிச்சி அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதமாக விதமாக அந்த வழியே வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பினர் இது குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News November 22, 2025

அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

image

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.

News November 22, 2025

ஈரோடு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!