News April 23, 2025
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News January 1, 2026
ஈரோடு: வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வேண்டுமா?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். (SHARE)
News January 1, 2026
ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

▶ஈரோடு மாவட்ட ஆட்சியர் – 0424-2260211. ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0424-2266333. ▶மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0424-2260999. ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 0424-2252052. ▶மாவட்ட சமூக நல அலுவலர்- 0424-2261405. ▶மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 0424-2275860. ▶மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் – 0424-2260255. ஈரோடு அரசு மருத்துவமனை – 0424-2253676. இதை SHARE பண்ணுங்க.
News January 1, 2026
BREAKING: கொடுமுடி அருகே பெண் தாசில்தார் உயிரிழந்தார்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் பால முருகாயி. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் டிஎன்பிஎஸ்சி-ல் தேர்ச்சி பெற்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


