News January 23, 2025
பொதுமக்களுக்கு கடலூர் எஸ்.பி. அறிவுரை

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடும். அதனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பழகும் நபர்களிடம், அவர்களது உண்மை தன்மை தெரியாமல் குடும்ப விஷயங்களையோ?, தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News November 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News November 4, 2025
கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பணி இடை மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த ஆ.எல்லப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் இன்று உத்தரவிட்டுள்ளார். இவருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ் கடலூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 4, 2025
கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


