News February 17, 2025
பொதுமக்களிடமிருந்து 835 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 835 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
Similar News
News December 14, 2025
தஞ்சை: ஆடு திருடிய 4 பேர் கைது

திருவையாறு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழிய வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் காரில் ஆடுகள் திருடப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் நான்கு ஆடுகளை பறிமுதல் செய்து ஆடுகளை கடத்திய நந்தகுமார், ராஜ்குமார், வெற்றிச்செல்வன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் 35-க்கும் மேற்பட ஆடுகளை கடத்தி விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

பொன்னாங்கண்ணிக்காடு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர், செல்போன் பேசியபடி பேராவூரணி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


