News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 13, 2025
புதுவை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
காரைக்கால்: நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு

காரைக்கால் ராயன்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் உண்டு உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 2026-2027ம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு நாளை (13.11.2025) திருபட்டினம் அரசு நடுநிலை பள்ளியில் காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளிகளின் விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தியில், மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து மின்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு 1800 425 1912 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தனர்.


