News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 23, 2025
புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளின் சரியான முகவரி, ஆதார் நகல் பெற வேண்டும்; விடுதியில் தங்குபவர்கள், அறையில் தங்குபவர்களின் விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.” உள்ளிட்ட இன்னும் பல கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
News December 23, 2025
புதுவை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

புதுவை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் CBI மற்றும் NIA விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை CBI மற்றும் NIA அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.


