News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 21, 2025
புதுச்சேரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734, Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221, Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
News December 21, 2025
புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மேட்டுப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், பூச்சி கார்த்திக், பெர்னாண்டஸ், சதீஷ் ஆகியோர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


