News March 23, 2025

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

image

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 29, 2025

சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் நிறுவனர் அரிமதி இளம்பரிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

News March 29, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளைஞர்களை குறி வைத்து, நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் அல்லது பதிவிறக்கம் (download) செய்துள்ளீர்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள், என கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம் என புதுவை காவல்துறை எச்சரித்துள்ளனர். உடனே நண்பர்களுக்கும் Share பண்ணீடுங்க.. Share It

News March 29, 2025

வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

image

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..

error: Content is protected !!