News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: சூறாவளிக்காற்று எச்சரிக்கை

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி, ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். வாக்காளர்களின் படிவங்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின்படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் (டிச.4) ஆகும் என தெரிவித்தார்.
News November 28, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 14
3. வயது: 30க்குள் (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ. 56,900
5. கல்வித் தகுதி: 10,12th
6. கடைசி தேதி: 29.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


