News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 18, 2025
சனீஸ்வரனை தரிசனம் whatsapp புகார் அறிமுகம்!

சனீஸ்வர பகவானை தரிசிக்க திருநள்ளாறு வரும் பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால் வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால்
9498728334 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
சட்டப்பேரவை: திமுக.காங்., உறுப்பினர்கள் வெளியேற்றம்

புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. குடிநீர் பிரச்சனையால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை மக்கள் பிரச்சினை பற்றி பேச சட்டசபையை குறைந்தது 5 நாட்களாவது நடத்த வேண்டும். சபாநாயகர் உடன் எதிர்க்கட்சிகள் வாக்குவாதம். எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக காங் உறுப்பினர்கள் குண்டு கட்டாக சட்டசபை காவலர்களால் தூக்கி வெளியேற்றம்.
News September 18, 2025
சனிக்கோளை பார்க்க புதுவையில் ஏற்பாடு!

வானில், சனிக் கோளின் எதிர்நிலை நிகழ்வு நடக்க உள்ளது. அதையொட்டி, அப்துல் கலாம் அறிவியல் மையம் & கோளரங்கம் சார்பில், செப். 21ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை காணலாம். இந்த நிகழ்வு பற்றி, இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார். இதனை மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம்.