News August 8, 2024

பொதிகை, குமரி ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து இயக்கம்

image

தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், ரயில் சேவைகள் ஆக.18ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து எழும்பூா் வரும் வந்தே பாரத் ரயில் ஆக.16ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் ஆக.15, 16 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு நெல்லை, செங்கோட்டை சென்றடையும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 1, 2025

BREAKING:கல்பாக்கம் அருகே அரசு பேருந்து வேன்-மோதி விபத்து

image

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கூவத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 20 பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் இன்று அதிகாலை கல்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

செங்கல்பட்டு: சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் குடும்ப முன்விரோதம் காரணமாக, தேவதர்ஷினி (17) என்ற மாணவியை அவரது உறவினரான 16 வயது சிறுவன் கத்தியால் குதித்தனர். இதில் படுகாயமடைந்த மாணவி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 11-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

செங்கல்பட்டு மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (நவ.30) இரவு முதல் இன்று (டிச.01) காலை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!