News April 12, 2025
பைக் வீலில் மின்சார வயர் சிக்கி மின்சாரம் தாக்கி பலி

திசையன்விளை அருகே இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிமலை (48). லோடு தொழிலாளி. இவர் நேற்று (ஏப்.11) காலை தோட்டத்திற்கு வாழைத் தார் வெட்டுவதற்கு சென்றுள்ளார். பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது அவர் சென்றுள்ளார்.பைக்கின் சக்கரத்தில் மின்கம்பி சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .
Similar News
News November 25, 2025
நெல்லை முக்கிய ரயில் மணியாச்சியுடன் நிறுத்தம்

நெல்லை வழியாக திருச்செந்தூர் – பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயணிகள் விரைவு ரயில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று மற்றும் 26, 28, 29 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் – வாஞ்சிமணியாச்சி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். இந்த ரயில் இந்த நாட்களில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 25, 2025
நெல்லை: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

நெல்லை மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


