News March 6, 2025
பைக் மீது வேன் மோதி புது மாப்பிள்ளை பலி

ஆரணி அருகே இரும்பேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அப்பு (21) தனது நண்பர் ஆகாஷுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அப்புவுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதமே ஆனது. ஆரணி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
தி.மலை: நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை பலி

கலசபாக்கத்தை அடுத்த கரையாம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்- வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் அய்யப்பன் என்ற மகனும் உண்டு. இந்நிலையில், வேளாண் பணிக்கு செல்லும் வழியின் குறுக்கே நீரோடை உள்ளது. அந்த கரையில் இறங்கிய அய்யப்பன் நீரில் 100 மீட்டர் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கி கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.


