News January 2, 2025
பைக் மீது மாடு மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரி (52), தனது மகன் சிவராமனுடன் நேற்று (ஜன.1) இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து நந்தம்பாக்கம் சென்றார். அப்போது, மாடு ஒன்று திடிரென சாலையை கடக்க முயன்றபோது, சிங்காரி மீது மாடு இடித்தது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
காஞ்சி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News January 6, 2026
காஞ்சி:பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
ஸ்ரீபெரம்பத்தூர்: கடைசியில் கம்பி எண்ண வைத்த கேக் வெட்டு!

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே, மறைந்த தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சமாதி மீது பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். சந்தவேலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், தனது நண்பர்களுடன் விபத்தில் இறந்த தம்பியின் சமாதியில் கத்தியுடன் கொண்டாடிய வீடியோ வைரலானது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அய்யப்பன், நரேஷ் மற்றும் நவீன்குமார் ஆகியோர் கைது.


