News February 17, 2025

பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

image

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News December 8, 2025

குமரி: குழந்தை கடத்தலில் பிடிபட்டவர் வாக்குமூலம்!

image

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3 வயது <<18494613>>சிறுமியை கடத்திய<<>> வழக்கில் ஆட்டோடிரைவர் யோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் கூறியதாவது – மதுக்கடையில் மது அருந்திய எனக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது ரயில் நிலையம் சென்று சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். பின் உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தூக்கிச் சென்றேன். ஆட்டோவில் அங்கும் இங்கும் சுற்றிய என்னை போலீஸ் கைது செய்தது என்றார்.

News December 8, 2025

குமரியில் 820 பேர் கைது!

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

News December 8, 2025

குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை பண்ணுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!