News February 17, 2025
பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News December 18, 2025
குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
News December 18, 2025
பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.
News December 18, 2025
பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.


