News March 25, 2025

பைக்கில் புகுந்த பாம்பு

image

உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (45). இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டுச் சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Similar News

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

அம்மாவாசை முன்னிட்டு இங்கெல்லாம் சிறப்பு பூஜைகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமாவாசை முன்னிட்டு, எங்கெல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இன்று அமாவாசை முன்னிட்டு கள்ளக்குறிச்சி காரனூர் ஓம் சக்தி அம்மன், கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோவில், முருகன் கோவில், வடக்கனந்தல் ஆவுடையார் கோவில், சிவன் கோவில், தியாக பாடிய அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

News March 29, 2025

இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

image

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அன்பழகன் பணிபுரிகிறார். இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், பாடம் நடத்திய போது, வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பெற்றோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!