News February 16, 2025
பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி உயிரிழப்பு

பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்.இவர் நேற்று திருக்கோவிலுார் – மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் உயிரிழந்தார். இது குறித்து நேற்று போலீசார் வழக்குப்பதித்தனர்.
Similar News
News November 20, 2025
கள்ளக்குறிச்சியில் 57 ஏரிகளில் மீன் குத்தகை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முடியனூர், நாகலூர், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம், ஏமப்பேர், சிறுவங்கூர் ஆகிய 10 ஏரிகள் உட்பட 57 ஏரிகளில் மீன் பாசி, மீன் குத்தகை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று (நவ.20) அறிவித்துள்ளார்.
News November 20, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று எங்கெல்லாம் மின் தடை?

கள்ளக்குறிச்சி: பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நைனார்பாளையம் வி .அலம்பலம் ,வி. கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், பெத்தா சமுத்திரம், தோட்டப்பாடி பூண்டி, காளசமுத்திரம், நீலமங்கலம், நிறைமதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு முதல் இன்று (நவ.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


