News February 16, 2025
பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி உயிரிழப்பு

பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்.இவர் நேற்று திருக்கோவிலுார் – மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் உயிரிழந்தார். இது குறித்து நேற்று போலீசார் வழக்குப்பதித்தனர்.
Similar News
News November 23, 2025
எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக ஆட்சியர் திடீர் ஆய்வு

காளசமுத்திரம் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (நவ.22)
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


