News April 23, 2025

பேர்ணாம்பட்டு அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

image

பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

வேலூரில் 76 சதவீதம் பணிகள் நிறைவு.. அதிகாரிகள் தகவல்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 12 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் படிவம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பூர்த்தி செய்யப்பட்ட 9 லட்சத்து 93 ஆயிரம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது 76 சதவீதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 2, 2025

வேலூரில் கொடூர விபத்து!

image

வேலூர்: அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று (டிச.1) வயலுக்கு சென்ற அப்பா இரண்டு மகன்கள் ஆகிய மூவரும் வயலுக்கு வைத்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 2, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!