News August 25, 2024
பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

திங்கள்சந்தை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன். இவர் நேற்று திங்கள்சந்தை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தபோது கோணங்காடு மினி பஸ் உரிமையாளர் அருள்ராஜ்(59) உட்பட 3 பேர் அங்குவந்து, “பஸ் நிலையத்தில் வரும் மினி பஸ்சுக்கு இடையூறு செய்தால் உன்னை பஸ் ஏற்றி கொலை செய்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
குமரி: லாரி மோதி இளைஞர் பலி!

மணவாளக்குறிச்சி நடுவூர்கரை பகுதி லாரி டிரைவர் சதீஷ்குமார்(40). இவர் நேற்று (டிச.7) மாலை லாரியில் பொருட்களுடன் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும்போது தெக்குறிச்சி சேதுபதி (24) பைக்கில் ஆலன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


