News March 29, 2025
பேருந்து மோதி ஊழியர் பலி

ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(45). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை சரவணன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மீனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 28, 2025
வேலூர்: கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை!

வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் 2020‑ஆம் ஆண்டு சுனில் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று (நவ.28) விதிசாரணை முடிந்த, வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி கோகிலா (35), மணிகண்டன்(32), சதீஸ் குமார்(33) மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் வதித்து தீர்ப்பளித்தார்.
News November 28, 2025
வேலூர்: 10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

வேலூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள் இங்கே <
News November 28, 2025
வேலூர் ஹாக்கி வீரர்கள் சென்னை நோக்கி பணயம்!

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இன்று (நவ.28) சென்னையில் துவங்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியினை காண்பதற்காக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 ஹாக்கி வீரர்கள் மற்றும் 55 வீராங்கனைகள் ஆகியோர் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், வீரர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்தார்.


