News January 24, 2025
பேருந்து நிலையத்தில் போலீஸ் வருவாய் துறை குவிப்பு

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டைக்கு வந்த வெற்றிக் கோப்பை!

மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் 34-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டிக்கான வெற்றிக் கோப்பை நேற்று ராணிப்பேட்டைக்கு வந்தது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், கலை நிகழ்ச்சிகளோடு கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் ஆக்கி வீரர் வீராங்கனைகள், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


