News May 15, 2024
பேருந்து நிலையத்தில் பொழுதுபோக்கு அரங்குகள்

புதிதாக அமைக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகத்திற்கு பொதுமக்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
BREAKING மதுரையில் டிச.17ல் போராட்டம்..!

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து டிச.17 ம் தேதி, போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.200 கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்தாததை கண்டித்தும், சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார்.
News December 13, 2025
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க.


