News March 5, 2025

பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

image

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Similar News

News October 19, 2025

திருச்சி: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

image

திருச்சி மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திருச்சி: தெரிந்து கொள்ள வேண்டிய அவசர உதவி எண்கள்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்வோம். 1. மாநில உதவி எண் – 1070, 2. மாவட்ட உதவி எண்- 1077, 3. அவசர மருத்துவ உதவி – 104, 4. விபத்து உதவி எண் : 108, 5. மின்வெட்டு -94987 94987 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News October 19, 2025

திருச்சி மாவட்டத்தில் 58.8 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.18) இரவு மழை பெய்தது. இதில் துறையூர் சட்டமன்றத் தொகுதி தென்பறநாடு பகுதியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 58.8 மில்லி மீட்டரும், சராசரியாக 2.45 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!