News March 5, 2025

பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

image

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Similar News

News April 20, 2025

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

News April 20, 2025

TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு-ரொக்கப் பரிசு அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் சார்பில், TNPSC குருப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு 21.04.2025 காலை 10 முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 பேருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்ங்க…

News April 20, 2025

குறுக்கே வந்த தள்ளுவண்டி – மெக்கானிக் பலி

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வடக்கு இடையபட்டி என்ற இடத்தில் தண்ணீர் பிடித்து சென்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!